search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு அமைப்பு"

    • கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இயக்குனர், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குனர், மருத்துவம், ஊரக நல பணிகள் துறை இயக்குனர் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும்.
    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும்.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடம் மற்றும் ஏற்கனவே வரிவிதிப்பு செய்யப்பட்டு அதன் பின் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும். அவ்வாறு வரியினங்களை செலுத்த முன் வராத பட்சத்தில் குழு ஆய்வு செய்யும்போது கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் 6 ஆண்டுகளுக்கான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவிகளிடம் ஆபாசபேச்சு விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சத்திய சேகரன் என்பவர் மாணவிகளிடம் செல்போ னில் ஆபாசமாகவும், சாதிரீதியாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பேராசிரியர், மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாசமாக பேசுதல், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல் என்பது உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பேராசிரியரை தேடி வருகின்றனர்.

    மேலும் பள்ளி-கல்வித்துறை சார்பில் பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகார்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்த பேராசி ரியர் மீது பள்ளி கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுப்பதற்காக மூத்த பேராசிரியர்களை கொண்ட 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு மறுதேதி அறிவிக்கப்படாமல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ×